நிலவே நீ சாட்சி

இருட்டு அறைக்குள் அமர்ந்து கொண்டு
ஜன்னல் வழியே நிலவைக் கண்டேன்....

அட எப்படி வந்தது
அழகாய் என் மனசுக்குள் வெளிச்சம்...?!

சிந்தையில் வெளிச்சம் வந்தால்
சீராகும் மன இருளும் என்றுணர்ந்தேன்....

சிரித்தபடி ஸ்விட்சைப் போட்டேன்
வழக்கம் போல பவர் கட்டு.....!

பக்கத்து வீட்டில் பளிச் ஒளி.....
யூ பி எஸ் வாங்க என்னிடம் பணம் இல்லை...!

மீண்டும் ஜன்னல் வழியே - கவலையிலிருந்து நான்
மீண்டு நுழைய அதோ அங்கே ஒரு வெளிச்சம்..

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-Dec-13, 6:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே