கை தட்டுகிறது வானம் - இடி இடி இடி
துள்ளிப் பாரு பக்கம் வானம்
தள்ளிப் பாரு துக்கம் போகும்
பின்னிப் பாரு பூமாலை யாகும் - இதை
எண்ணிப் பாரு சோம்பல் சாகும்...!
சவடால் பேச்சு சாதனை யாகுமோ ? நீ
உழைக்காவிட்டால் வேதனை போகுமோ ?
செயல்பட்டால் இந்த செகமே சொர்க்கம் ! நீ
சிந்தையில் பயந்தால் யாருக்கு நஷ்டம் ?!
துடிப்பாய் இருந்திடுவோம் தோழமைகளே
துடி துடிக்கும் நிலை நமக்கும் இல்லை....!
இடி இடிக்கும் முகிலும் வானம் தன்னில் - இனி
அது நமை நினைத்தது வானத்தின் கரவொலியே...!