பாவிஆகாதே தோழா
![](https://eluthu.com/images/loading.gif)
மார்பில் பால் சுரக்காத தாய்
பசியால் பாலுக்காய்த் தவிக்கும் குழந்தை
பால் வாங்க பணம்மில்லாத் தந்தை
உன்னைச் சுற்றிக் கோடிப்பேர் இருக்க
உயிரற்ற சிலைக்கும் உணர்வற்ற உருவத்திற்கும்
பால் அபிசேகம் செய்வதேனோ
பசி தீர்த்து புண்ணியம் தேடீர்
பல உயிர்ப்பசி தீர்க்கும் பாலை
பாழடித்து பாவிஆகாதே தோழா !!!
என்றும் அன்புடன் -ஸ்ரீ-