ஊழல் ஊழல் எங்கும் ஊழல்

அரசின் ஊழல் எங்கும் ஊழல்
பாரில் மலிந்து கிடக்கும் ஊழல்
நல்ல ஆட்சியும் எங்கும் இல்லை
அரசியலிலும் பல பல ஊழல்கள்

பொருட்களிலும் அரிசியிலும் ஊழல்
நாலாந்தர ஊழல் நாடெங்கும் ஊழல்
அரசியல் வாதிகளால் தினம் தினம் ஊழல்
தேர்தலில் ஊழல் இலங்கையிலும் ஊழல்.

நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஊழல்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஊழல்
பங்குகள் சரிவு பங்கு சந்தையிலும் ஊழல்
சோனியாவின் மருமகன் ராபர்ட் வாதேரா
மீது கூட நில ஊழல் வறுமையிலும் ஊழல்

சோலரா பேனல் ஊழல் இராணுவத்தில் ஊழல்
பணத்தின் மேலே அதிக ஆசை தாகம் ஊழல் ,
அணை கட்டும்போதும் ஊழல்,பத்திரம் பதியும்
போதும் ஊழல் ஆயுதம் வாங்கும் போதும் ஊழல்
பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ஊழல் , பிறப்பு அத்தாச்சி பத்திரத்துக்கும் ஊழல் பாடசாலையிலும் ஊழல்

தொலை தொடர்பிலும் ஊழல்.பொலிஸ் பதிவிலும் ஊழல்
எரிவாயுக்களிலும் ஊழல் காவல் துறையிலும் ஊழல்
சவப்பெட்டியிலும் ஊழல் பிணத்தை புதைப்பதிலும் ஊழல்
ரயில்வேயில் பல கோடி ஊழல்.அம்மாஆட்சியிலும் ஊழல்
தாத்தாவின் ஆட்சியிலும் ஊழல் சோனியா ஆட்சியிலும் ஊழல்

ஊழலும் தீரா நோயும் ஒன்றே .ஊழல் செய்து கொண்டு இருக்கும் பெருச்சாளிகள் பலர். இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்க. ஊழல்
எப்படி தான் ஒழியுமோ . நேர்மை மறந்து , கடமை மறந்து , ஊழல் இன்னும் உறங்காமல் வாழ்கிறது. உழலுக்கு துணை போகாது .
ஊழலை ஒழிப்போம் ....

எழுதியவர் : (13-Dec-13, 3:07 pm)
பார்வை : 274

மேலே