உன்னருகில் இருக்கும் வேளைகளில்

உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் நேரம் கூட
உன் மீதான பொறாமையால்
வேகமாக ஓடி விடுகிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இமைகள் கூட
உன்னைப் பிரிய விருப்பம்
இன்றி துடிக்க மறுக்கிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இதயம் கூட
தன் வேலையை மறந்து
மயங்கி போய் விடுகிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் மூளை கூட
உந்தன் உதடுகள் கூறும்
வார்த்தைகளை மட்டுமே சேகரிக்கிறது..
என்னதான் செய்தாய் பெண்ணே
என்னையே நான் தொலைத்து விட்டேன்..!
கலைந்து விடாதே கனவை போலே
பிரிந்துவிடும் என்னுயிரும் என்னைவிட்டு..!