விடா முயற்சி

சின்னஞ்சிறு இதயம்!
அதில் சிறகடிக்கும் கனவுகள்!
அத்தனையும் நிறைவேறும்!
உறுதியுடன் கூடிய விடா முயற்சி இருந்தால்......!

வேதனைகளும் சாதனைகளாய் மாறும்
விடா முயற்சி என்னும் விதை இருந்தால்......!

நிலவில் மனிதன் காலடியை வைத்தானா?
இல்லை காலணிகளின் சுவடியை வைத்தானா?
அது முக்கியமல்லை......
காலூன்றி நின்றானே அது தான் விடாமுயற்சி....
விஞ்ஞானத்தின் அதிர்ச்சி.......

கலங்கிய நீர் கூட கண நேரத்தில் தெளவாகும்...!
நீர் போன்ற நெஞ்சைக் கொண்டிரு....
எப்பாத்திரத்திற்கும் ஏற்றால் போல்
உன் பாத்திரம் அமையும்படி....!

திண்ணிய நெஞ்சம் கொண்டிரு!
திகட்டாத காதல் கொண்டிரு...!
திமிராத அமைதியை வேண்டிரு!

எண்ணியனவெல்லாம் ஏகபோகமாய் முடியம்
ஏளனங்களை மதியாத ஏற்புடை நெஞ்சமிருந்தால்!!

ஆழ்கடல் சென்றவனெல்லாம் முத்துக்குளித்தவன் ஆவதில்லை....
அதன் ஆழம் வரை சென்றவனே
முத்துக்கும் சொந்தமாகிறான் !
விடாமுயற்சிக்கும் சொந்தமாகிறான்!!!

வறியவனாக பிறந்துவிட்டால்
வாழ்வதற்கு வழி இல்லையா!
வறுமையை வழியனுப்பி
வாழ்ந்தவர்கள் யாரும் இல்லையா??......

விழுவது வெற்றி அல்ல....
விழுந்தவுடன் எழுவது தான் விஸ்வரூப வெற்றி!!....

விழுவது இருமுறை ஆனாலும்
எழுவது மும்முறையாகட்டும்...!
பலமுறை விழுந்தால்தான்
மழைத்துளியும் ஆறாகும்...!
ஒரு விடாமுயற்சி தான்
பொக்ரானில் அணுகுண்டாய் வெடித்தெழுந்தது..!
ஒருவரின் ஆயிரமாவது முயற்சிதான்
உலகத்தின் இருளை வெளிச்சமாக்கியது!!!!

தூங்காமல் கனவு காணுங்கள்!
அப்துல்கலாமின் கனவுகளுக்காக அல்ல!
அவரவர் அப்பாக்களின் கனவுகளுக்காக..........

விதைக்குள்ளே இருந்துவிட்டால்
வெளியேறாது ஆலமரம்!
உனக்குள்ளே இருந்துவிட்டால்
வீணாகும் உந்தன் திறம்!!...
திடமான முடிவெடு!
திறமையுடன் முன்னேறு!!
கடின உழைப்பை காணிக்கையாக்கு
வருங்காலம் உன்னோடு!!!!
வசந்தகாலம் உன் வாழ்க்கையோடு....

எழுதியவர் : venkadeshkumar (18-Dec-13, 9:45 pm)
பார்வை : 20849

சிறந்த கவிதைகள்

மேலே