காதல்

தொட்டால் சிணுங்கி நீ - உன்னை
தொடாமல் நேசிக்கும் தென்றல் நான்
முள் நிறைந்த கள்ளியில்
ஒளிந்துள்ள தேன் துளி நீ - உன்
மதுவை ருசிக்க வரும் தேன் ஈ நான்
காதலை உணரவைத்த காவியம் நீ - உன்னை
கவிதையில் வடிக்காத கவிஞன் நான்
காந்தகத்தின் வட துருவம் நீ - உன்னை
அடைய முயற்சிக்கும் தென் துருவம் நான்
காஸ்மீரில் மலர்ந்த
பணி படராத ரோஜாவே - உன்னை
பாதுகாக்க வந்த காவலன் (காதலன்) நான்
விண்ணில் ஒளிரும் வெள்ளி மலரே - உன்னை
தூரத்தில் நின்று ரசிக்கும் பார்வையாளன் நான்
தாமரை இலை நான் – என்னில்
ஒட்டாமல் விலகி செல்லும் தண்ணீர் நீ


என்றும் நினைவுடன்
என் நெஞ்சில் நீயடி

எழுதியவர் : ச.தமிழழகன் (20-Dec-13, 2:30 pm)
சேர்த்தது : tamizhazhagan
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே