உறங்கும் கடவுள்

வரிசையில் இடம்பிடித்து
வெகுநேரம் காத்திருந்து
கடவுளை தரிசிக்க
ஆயத்தமானர் சிலர் ....

சிறுபணம் செலவழித்து
காத்திருக்கும் அனைவரையும்
நொடிப்பொழுதில் கடந்துசென்று
கடவுளின் அருள்வேண்டினர்
சிலர் ...

எதையுமே பொருட்படுத்தாமல்
இமைகளை திறந்தபடியே
உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்
கடவுள் ....

எழுதியவர் : அருண் (27-Dec-13, 4:15 pm)
Tanglish : urankum kadavul
பார்வை : 142

மேலே