வாழிய வாழிய செந்தமிழ் நாடே

என் உயிரிலே ஊற்றெடுத்த விடுதலை வீரனின் தியாகங்கள்,
விடுதலை முழக்கத்தை கவியிலே உயிர்ப்பித்த கவிஞனின் கற்ப்பனைத்திறன்கள்,
என் உயிரிலே சங்கமித்ததால்.....
நிலவின் ஒளியை காகிதமாக்கி ,
வான மழையை தூரிகையாக்கி ,
பூவிரல் கொண்டு துடிப்பான இந்தியனின் இதயத்தில் செதுக்குகிறேன் ..
நீ ஒரு துணிவான இளைஞன் மட்டும் அல்ல
நீ ஒரு துடிப்பான " இந்தியன் "

மூன்று புறமும் கடல் சூழ
முக்கனியின் சுவை ஆற
மூவேந்த்ர்கள் வாழ்ந்த நாடு.

சீரிய சிங்கத்தின் வீரத்தை முத்திரையாய் சூடிய தேசம்!
உயர்குடி மக்கள் உயிர்நிலைத்து வாழ்ந்த தேசம்.
உயிர்மேலாய் மானத்திற்கு தலை வணங்கும் நாடு.
ஐநிலங்கள் அம்சமாய் அமைந்த நாடு!
முப்படை வீரம் கனிந்த நாடு !
முத்தமிழ்க் கவிஞனன் வாழ்ந்த நாடு!
அழகாய் முத்துக் குவியும் நாடு!
அழகில் கற்ப்பில் சிறந்த நாடு .
அறிவியல் அதிசயங்கள் நிறைந்த நாடு !

வாழ்க! வாழ்கவே !
பாரெங்கும் சிறந்து விளங்கும் திராவிட நாடு
வாழ்கவே !

எழுதியவர் : muthulatha (31-Dec-13, 11:05 am)
சேர்த்தது : M.Muthulatha
பார்வை : 726

மேலே