யானைப் பசி

முதுமலை யானைகள் முகாமில் ஒரு காட்டு யானை கோவில் யானை ஒன்றைப் பார்த்துச் சொன்னது:
நீ புண்ணியம் செஞ்சவனப்பா. மூணு வேள நல்ல சாப்பாடு. குடிக்க குளிக்கத் தேவையான அளவு தண்ணி கெடைக்குது. எங்க பாடு திண்டாட்டம். குடிக்கக்கூடத் தண்ணி இல்ல. இந்த பாழாப் போன மனுசங்க வனத்தையெல்லாம் மொட்டைக் காடாக்கிட்டாங்க. பசி தண்ணித் தாகம் தாங்க முடியாம நாங்க ஊருக்குள்ள வந்தாலும் எங்களை
வெரட்டி அடிக்கிறாங்க.

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (1-Jan-14, 12:01 am)
பார்வை : 241

மேலே