வாழிய வள்ளுவம்

இவருக்கு நிகர் எவரும் இல்லை
இவர் சொல்லாதது
இனி உலகில் எதுவும் இல்லை
இனி சொல்லவும் ஒன்றும் இல்லை

முப்பாலுக்கு நிகர் எப்பாவும் இல்லை
முக்கோடி முனிவர்களும் எழுதியது இல்லை
வாழ்க்கை கல்வியை ஐயன்
வள்ளுவர் போல் ஒருவரும் சொன்னதில்லை ...

திருக்குறளில்
கற்பூர மணம் இருக்கும் கருத்தில்
கடலின் ஆழம் இருக்கும்
காற்றின் சுகமிருக்கும் வாழ்க்கை
கல்வியை அது கற்றுத் தரும் ....!

கந்தக நெடி இருக்கும் -அதில்
வெடிமருந்தின் வீரியம் இருக்கும்
கை எரி குண்டுகளும் துப்பாக்கியின்
தோட்டாக்களும் திருக்குறளில்
நிறைய இருக்கும்

அணுவின் திறன் இருக்கும் அது
ஆற்றலை அள்ளி வீசும் .......!
காதலை வாழ்த்திப் பேசும் அந்த
காமத்தை அடக்கி வைக்கும் ....!

கன்னித் தமிழில் கற்கண்டு இன்பச்
சுவையில் அள்ளித் தந்த ஐயன்
திருவள்ளுவரின் திருக்குறளை
அனைவரும் படித்து பயன் பெறுவோமே ....!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (14-Jan-14, 7:30 am)
Tanglish : vaaliya valluvam
பார்வை : 277

மேலே