இனியொரு சங்கமம்

அறிவியலே ! நீ
ஆராய்ச்சி செய்து பார்
ஆதாமும் ஏவாளும் எமதினமாய் இருக்கக்கூடும்

விழுது விட்டுக் கிளை பரப்பி
திசைகளெட்டைச் சிறைபிடித்தாய்
இருந்த இடம் தமதென்று
பிறந்த இடம் மறந்தனையோ ?

தரணியாண்ட தமிழினமே !
பரணி கேட்டுத் தூங்கினையோ?

வீழ்ந்தவனே ! விழித்தெழு.

களவியலும் கற்பியலும் கற்று
அகமும் புறமுமொன்றி
சாதி மதப் பகையழித்து
தமிழ் மறவர் படை நடத்து.

கருந்தேக்கு நம்மைக்
காளான்கள் மிரட்டுவதோ ?

அயலான் அடுப்புகளில்
நம் மூளை விறகாமோ ?

சீனமென்ன? சிங்களமென்ன ?
ஈனப்பிறவி யாவுமே
நம் ஒற்றுமையின் அணல் பட்டு
வெந்து பொடியாகட்டும்

மான மரபே ! மலையிட்ட தீச்சுடரே !
சங்கமிப்போம் வா பொங்கல் முதல்


---ராசிகவிபாலா.
15 சனவரி 2014

எழுதியவர் : -ராசிகவிபாலா. (15-Jan-14, 10:05 am)
பார்வை : 65

மேலே