தமிழ் புத்தாண்டு வாழ்த்து

இல்லாதது தொழுது இருந்ததெல்லாம் இழந்து
கல்லார் கற்றோரே னும் கணக்கும் முற்றொழிந்து
பல்புனைக் கதைகள் பயனிலாச் சாத்திரங்கள்
நல்லெனப் போற்றி நலிந்த நற்றமிழர்

உழைப்பில் மகிழ்ந்து உண்மையை நாடி
உறவினை அணைத்து உரிமைக்காய் போராடி
தனக்கென்றோர் கலை இலக்கியம் பண்பாடு
உண்டென்று உரைக்க வந்த ஒரே திருநாள் ..!

தை முதல்நாள் தமிழர்க்குப் புத்தாண்டு
தமிழர் இல்லமெலாம் பொங்கட்டும் மகிழ்ச்சி ...!
திராவிடர் திருநாளின்று பகுத்தறிவோடும் இனவுணர்வோடும்
தமிழர் உள்ளமெலாம் பொங்கட்டும் எழுச்சி ...!!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (15-Jan-14, 10:10 pm)
பார்வை : 120

மேலே