காதலிக்கு
கார் குழலே
கருமை நீர் குழலே
உன்னைக் கண்டதும்
மயங்கி விட்டேன் !
பாதவொலி
பாரி சாதவொலி
அதைக் கேட்டதும்
உயிர் கசிந்தேன் !
அந்தக் காற்று வழி
வந்தக் கவிதை மொழி
சந்தம் கேட்டதும்
மாய்ந்து விட்டேன் !
தங்கத்தினால் செய்த
---உன் இடையில்
சங்கத் தமிழை நான்
---பயின்று கொண்டேன்!
மங்கா நிலவே
---உன் மந்திர சிரிப்பினில்
தூங்காது நான்
---கண் விழித்தேன்!
பூந்தொட்டிலில் உன்னை உறங்க வைத்து
---தங்கத் தாலாட்டுப் பாட்டிசைப் பேன்
கூந்தலைக் கொதியே சிடுக் கெடுத்து
---அதை சொர்கத்தின் வேர்கள் என்பேன் !
மாந்தொப்பினிலே ஒரு மல்லிகை வளர்த்து
---பாதத்தில் தூவிடு வேன் ! உன்
காந்தப் பார்வை ஒன்றினிலே நான்
---உண்மையில் உயிர் துறப்பேன் !
விவேக்பாரதி