அதே காதலுடன்
உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடமும்
என் மனதோடு
நான் கொண்ட கோபம்....
காதலிக்க
கற்றுக்கொடுத்தாய்
கனவிலும் என்னை
தொடர்ந்து வந்தாய்..........
புரிதல் ஏதுமின்றி
நீ நடந்ததால்
உன் `எண்ணை`
தொலைத்தேன் விருப்பமின்றி.....
இன்று அழைப்பை எடுக்க
குறுகுறுக்கும் என்னிதயம்
உன் அழைப்பிலக்கமின்றி
தடுமாறுகிறது அதே காதலுடன் ....!!