வஞ்ச புகழ்ச்சி



எங்கும் மக்கள் கூட்டம்....

ஆள் பாதி... ஆடை பாதியாம்....

ஜவுளி கடையில் மக்கள் கூட்டம்...

அழகுக்கு அழகு சேர்க்கும்....

ஆபரண கடைகளிலும் மக்கள் கூட்டம்...

தித்திக்கும் மகிழ்ச்சி தரும்..

திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம்...

கேட்டது கிடைக்கும்...

கேளிக்கை கூடங்களிலும் மக்கள் கூட்டம்..

மயக்கம் தரும்....

மதுபான கடைகளில் கூட மக்கள் கூட்டம்...

இப்படி...

நகர் முழுக்க மக்கள் கூட்டம்...

ஆனால்...

நாட்டின் முதுகெலும்பாம் கிராமத்து

வயல்களில் எருதுகள் மட்டுமே...

நாளைய மனிதன் உணவுக்காக

எங்கு செல்வானோ....?

கூட்டம்..... கூட்டமாக......

எழுதியவர் : இன்பா (6-Feb-11, 7:27 pm)
சேர்த்தது : Inbhaa..
பார்வை : 435

மேலே