மலர்
உனைப் பார்த்தேன்
ரசித்தேன்
என்னிலை மறந்தேன்
உனை முகர்ந்தேன்
அணைத்தேன்
பரவசமடைந்தேன்
கற்பனை வளர்த்தேன்
கவிதனைப் புனைந்தேன்
உன் மணமதில் விழுந்தேன்
பறித்தேன் கோர்த்தேன்
மாலையாய் அணிந்தேன்
தலையிலும் வைத்தேன்
பல நிறம் பார்த்தேன்
பிடித்ததை எடுத்தேன்
வைத்தேன் இறைவனைப் பணிந்தேன்
உன் முகம் பார்த்தேன்
சோகத்தை மறந்தேன்
மகிழ்வாய்க் கழித்தேன்
உனைப் பார்த்தேன்
மகிழ்ந்தேன் உன் வாட்டமறிந்தேன்
கவலை அடைந்தேன் அழுதேன்