ஒரு முறை மட்டும்
தண்ணீரெடுக்கும் குழாயடி....
தெருமுனை விநாயகர் கோவில்...
ஊரின் பேருந்து நிருத்தம்....
உனக்காக காத்திருக்கும் நேரங்களில்
ஒரு காக்கை கூட கவனிப்பதில்லை,
ஆனாலும்-
உலகமே என்னை
உற்று நோக்குவதாய் உணர்கிறேன்.!
உடம்பின் செல்கள் அனைத்திலும்
கடிகார முள் நொன்டியடிக்கிறது,
நொடியும் யுகமாய்....
பெற்றேர் இட்ட பெயர்
தண்டச்சோறாய் மாறிப்போனது...
தவமிருக்கும் மாமுனியாய்
காத்திருக்கிறேன் உனக்காக...
ஒருமுறையேனும் பார்த்து விடு,
என் ஜென்மம் மோட்சம் பெறும்
என் அன்பே.....