சிட்டுக்குருவியின் நட்பு

ஒரு வெள்ளை ரோஜாவை சிட்டுக்குருவி ஒன்று உயிருக்குயிராய் நேசித்ததாம். வெள்ளை ரோஜா சொன்னதாம் நான் எப்போது சிவப்பாக மாறுகிறேனோ அப்போது தான் உன்னை நேசிப்பேன் என்றதாம். வெள்ளை ரோஜா எப்போது சிவப்பாக மாறுவது நான் எப்போது நேசிப்பது என நினைத்த சிட்டுக்குருவி வெள்ளை ரோஜா மீதுள்ள அன்பு மிகுதியால் தனது சிறிய உடலை வெள்ளை ரோயாவில் உள்ள விசமுள்ள முட்களில் குத்தியதாம். அதில் ஏற்பட்ட சிவந்த குருதியை வெள்ளை ரோயாவில் தெள்ளித்ததாம். வெள்ளை ரோஜா மெல்ல மெல்ல சிவப்பாக மாறி சிட்டுக்குருவியை நேசிக்க ஆரம்பித்ததாம். அதே நேரம் சிட்டுக்குருவி உயிருடன் இல்லையாம். வெள்ளை ரோயாவில் உள்ள அன்பு மிகுதியால் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டதாம்.

எழுதியவர் : suguna (7-Feb-11, 3:30 pm)
சேர்த்தது : suguna
பார்வை : 703

மேலே