துங்கை நதி தேவி சாரதே

தேவி சாரதே

துங்கை நதிக்கரையில் வீற்றிருக்கும் கருணைத் தாயே
தூயமனங்களில் குடியிருக்கும் சக்தியின் வடிவமே
துணையாக நின்று எம்மை காக்கும் அருள் அன்னையே
தூய்மையுள்ளதால் உன்னை நினைத்து என்றும் வணங்கிட
துக்கங்கள் யாவும் ஒளி கண்ட பனிபோல் மறைந்திட
தூளியில் இருக்கும் குழந்தையை அன்னை காப்பதுபோல
துற்சக்திகள் எங்களை அணுக விடாமல் தடுத்துக் காத்து
தூயசக்தியாகத் தொடர்ந்து எங்களுடன் இருந்து காப்பாற்றி
துணை நீயே அருள்மிகு தாயே எனத் தொழும் அடியவரை
தூக்கத்திலும் விழிப்பிலும் உன் வடிவம் மறக்காமல் இருக்க
துடிக்கும் இதயம் உள்ளவரை தொழுது வணங்கிட அருள்வாய்

எழுதியவர் : கே என் ராம் (22-Oct-24, 1:49 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 3

மேலே