முன்விவரம்

வாசித்த வரிகள் எல்லாம் வாசம் கொண்டது பெண்ணே வரைந்தது நீ என்பதால் .. !
உன்னோடு நான் நட்பாக ஆசை கொண்டேன்
நீயும் தமிழை நேசிப்பதால் ... !
துவண்டு போன தும்பைச்செடியும்
காற்று பட்டு பூத்து குலுங்கும் ,,,
பாவையே உன் கண்கள் பட்டால் பாவம்
இவன் கண்களும் தும்பை போல ஆகுமே !
துடிக்கிறேன் உன் முகவரி கேட்டு
இதை வடிக்கிறேன் உன் முகம் பார்த்து .

எழுதியவர் : கவி பறவை (27-Jan-14, 12:28 pm)
சேர்த்தது : கவிப் பறவை
பார்வை : 61

மேலே