தனிமையில் பேசும் உள்ளம்

புதியது
பூத்தது புதுவிதமாக
இனியது
இனித்தது
இகம்பரமாக...

கனவுகள்
வளர்ந்தது பகல்
இரவாக
நினைவுகள் உதித்தது
ஒரு மனதாக...

கவிதைகள்
மலர்ந்தது உயிர்
நினைவாக கவலைகள்
மறந்தது
மகிழ்ச்சிகளாக...

புது யுகம்
உதித்தது உறவுகளாக
பழமைகள்
மறைந்தது பகல்
நிழலாக ..

உறவுகள்
வளர்ந்தது புதுமைகளாக
நினைவுகள்
விரைந்தது
ஒருமனதாக...

காலமும்
விரைந்தது பருவங்களாக
இயற்கையும்
சிரித்தது
இகழ்ச்சிகளாக...

சிந்தனை
அமர்ந்தது தனிமைகளாக
சில உண்மைகள்
தெரிந்தது
உன்னதமாக...

எழுதியவர் : லெத்தீப் (29-Jan-14, 9:25 pm)
பார்வை : 121

மேலே