ஒற்றுமையுடன்

அன்பு என்னும்
வயலில்
பண்பு என்னும்
வித்தை விதை,

அங்கே

நேசம் என்னும்
நீர் பாய்ச்சி
பாசம் என்னும்
பயிர் முளைக்கட்டும்,

நன்மை என்னும்
உரமிட்டு
தீமை என்னும்
களை பறித்தாய்

ஒற்றுமை என்னும்
உலகம் ஓங்கி
வளரும்

பின்பு
துன்பம் துயரம்
ஏமாற்றம்
திருட்டு
பொய்
பொறாமை
இப்படி பல இன்னல்கள்
அழிந்து விடும்

வாழ்வோம் ஒற்றுமையுடன்

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (30-Jan-14, 10:08 am)
பார்வை : 633

மேலே