ஆண்டவன் காட்டியவழி

ஆண்டவன் காட்டியவழி

மாமனார் வீட்டில் நிரந்தரமாக
முகாம்போட்டு விட்ட--அந்த
மாப்பிள்ளை மொழிந்தார்

"ஆண்டவன் காட்டியவழி,
அடியேனுக்கு ஏதுதனிவழி?

இமயத்துவசன் மகளைக்
கட்டிய சிவபெருமான்
இமயமலை யிலேயே
தங்கி விட்டார்---
குன்றக் குறமகளைக்
கட்டிய முருகன்
குன்றித்தின் முகட்டில்
குடிகொண்டு விட்டான்---
திருப்பாற்கடல் திருமகளைக்
கட்டிய திருமால்
திருப்பள்ளி கொண்டார்
அரவணையில் அங்கே--

ஆண்டவன் காட்டியவழி
அடியேனுக்கு ஏதுதனிவழி?"

எழுதியவர் : பேராசிரியர் (2-Feb-14, 9:10 am)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 68

மேலே