அஞ்சலுக்கு கண்ணீர் அஞ்சல்லி

கடல் கடந்தே கண்ணீரையும்
காதலையும் சுமந்து வந்த
காகித கப்பலுக்கு இன்று
கண்ணீர் அஞ்ச(ல்)லி
அன்புள்ள எனத்துடங்கும் ஒற்றை
வார்தைக்குள் புதைந்திருக்கும்
ஆயிரமாயிரம் பூரிப்புகள்
பெற்றெடுத்த அன்னையாகினும்
மெய்யனைத்த மங்கையாகினும்
அலுவலக படிவமாகட்டும்
காதலர் கவிதையாகட்டும்
தம்பதிகளின் உள்ளமாகட்டும்
உன் முத்திரை என்றும்
இரண்டாம் பச்சம்தான்
முத்தமெனும் முத்திரை
பதிக்க நீ ஆண்களையும்
உதட்டில் மைபூச செய்த
பெருமை உன்னையே சாரும்
ஆண்டுகள் பல கழிந்துவிட்டது
உனக்காய் காத்திருந்த அழகிய
காலம்போய் நினைவிலிருந்தும்
நீயின்று களைந்து விட்டாய்
அபாய வண்ணம் பூசி
ஆட்சி செய்த உனக்கோ இன்று
அபாயமணி அடித்தாகிவிட்டது
புராணத்து புறாக்கள் கதைபோல்
வரும் என் தலைமுறைக்கு
அஞ்சல்பெட்டியே நீயும்
ஆங்காங்கே அந்தரத்திலும்
உன் ஒற்றை காலூண்டிய
நெடுந்தவமும் விஞ்ஞான
வளர்ச்சியால் உந்தன் தூக்கு
தண்டனை ரத்து செய்து
நிரந்தரமாய் உனக்கு இங்கு
சாப விமோச்சனமும்,,,,,
பிரியா மனமுடன் பிரியும் விடை ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.......