அன்னை

உன் கண் பார்த்தால் அது கவிதையாய்....
உன் சொல் கேட்டால் அது இசையாய்...
நீ நடந்தால் அது ஓவியமாய்...
இருளில் நீ விடியலாய்...
விடியலில் அதன் வெளிச்சமாய்....
என் தூக்கத்தில் நீ கனவாய்...
என் துக்கத்தில் ஆறுதலாய்...
எப்போதும் நீ மட்டுமே எனக்காய்...
யாருக்கும் புரியாது நம் புரிதல்.....
ஆம்...
தாயான எனக்கும்!
என் குழந்தையான உனக்கும் மட்டுமே !
தெரியும் இந்த அறிதல்..........