திருமண பந்தம்

திருமண பந்தம்
ஆயிரம் காலத்துப் பயிர்
ஆயிரம் காலம் பார்த்தவர் இல்லை
பாரம்பரியம் காக்க பந்தம் சொன்னார்.
தலை முறை தலை முறை காத்து
நிலைத்திட மனத்திடை கொண்டார் .

மண மேடை கண்டு
மண வாழ்க்கை கொண்டு
மனம் கோணாமல் வாழ்தல் சிறப்பு.
கோபம் வருவதும்
கூடாமல் பேசாமல்
இருப்பதும்
அன்றாட நிகழ்வுகள்
புறம் தள்ளி புது நாள்
மறு நாள் என்றே
வருவது பார்த்தல் நன்று.

திருமண முதிர்வு
அறிவு கொடுக்கும்
திருமண முறிவு
அழிவு கொடுக்கும்

மரம் முறியலாம்
மணம் முறியலாமா ?
கை கால் முறிந்தால்
பிரித்தா வைக்கிறோம்
சிலவு செய்து இணைக்கிறோம்

படிப்பு தந்த வசதி மேலாக்க
படிப்பும் வசதியும் பாராமல்
படித்தது ஏட்டளவில்
பண்பாடு வாசல்வரை
வாழ்ந்தது போதுமென்றால்
இன்று ஒரு கணவன்
நாளைக்கு ஒரு மனைவி
வாழ்வது வாழ்க்கையல்ல
வரப்போவது நாய்க்கூட்டம் .

விட்டுக் கொடுத்து
விவரம் கேட்டு
பொறுமை காத்து
நம் கோபம் நமக்குள்ளே
நல்லதும் கெட்டதும்
நாலு சுவருக்குள் மட்டும்

நினைத்துப் பார்த்து
வாழ்ந்து பார்த்தால்
மண முறிவு அறியாத
சொல்லாகும் .

எழுதியவர் : arsm1952 (16-Feb-14, 7:34 am)
Tanglish : thirumana pantham
பார்வை : 1996

மேலே