அதிசயம்

உலகத்தில் பொதுவாக மனிதன் மட்டும் இல்லாது எந்த ஒரு உயிரினத்திற்கும் வெளிப்படையாக இருக்கும் ஒன்றைவிட மறைத்து வைத்திருக்கும் ஒன்றின் மீதுதான் ஆர்வம் அதிகரிப்பதாக ஒரு குறிப்பு சொல்கிறது நாமும் அதை ஆராயத் தொடங்கினால் இந்த பதிலைத் தவிர புதிதாக ஒன்றும் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை. சரி இந்த மறைந்து இருக்கும் ஒன்றிற்கும் இன்றையத் தகவலுக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு பல கேள்விகள் தோன்றலாம். சொல்கிறேன் .


இன்று நாம் எல்லோரும் இந்த இன்று ஒரு தகவலின் வாயிலாக உலகத்தில் கற்பனையில் கூட நம்மால் எண்ணிப் பார்க்க இயலாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தனக்குள் உள்ளடக்கி தனித் தன்மையுடன் காட்சித் தரும் பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் .


நம் அனைவருக்கும் பிரமிடுகள் பற்றி ஓரளவிற்கு அதன் அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக தகவலுக்கு வருகிறேன் .

இந்த பிரமிடுகள் பற்றி நாம் அறிவதற்கு முன்பாக ஒரு நகரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் அலெக்சாண்டிய நகர் அப்படி என்ன இந்த நகரத்தில் இருக்கிறது என்று நம் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் எழலாம் சொல்கிறேன் .


முதல் முதலில் ரோமானியர்கள் கடல்வழியாக வந்து தங்களின் சாம்ராஜியத்திற்கு முதல் பாதம் இந்த நகரத்தின் மண்ணில்தான் பதிக்கப் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அதுமட்டும் இல்லை ரோமானியர்கள் தங்களின் பெயரை உலகம் எப்பொழுதும் மறக்காமல் மனதில் வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே கட்டடக் கலையில் பல நுணுக்கங்களை கையாண்ட இடமும் இதுதான். இதையும் தாண்டி வியப்பான ஒரு சிறப்பு இந்த நகரத்தில் என்னவென்றால். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று பத்து மில்லியனையும் தாண்டிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் மிகப்பெரிய நகரம் என்ற ஒரு தனி சிறப்பே இதற்கு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்குதான் நாம் இன்று பார்க்கப்போகும் உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த அதிசய பிரமிடுகள் பல கட்டப்பட்டு இருக்கின்றது.


இங்கு கட்டப்பட்ட பிரமிடுகளிலேயே மிகவும் வியப்பிற்குரிய ஒன்று கய்சா ப்லாடீவ் ( GIZA PLATEAW ) . இதில் என்ன அப்படி சிறப்பு என்றால் .இவை உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. 26,00,000 பாறைகள்இதனை கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரங்கள் மென்மையாகத் தேய்த்து துளியும்சந்து இல்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.


மாவீரன் நெப்போலியன் அவர் காலத்தில் ஒருமுறை சொற்பொழிவின் போது இந்த பிரமீடு நானுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ஸ் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச்சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கின்றது.இதே போன்ற ஓர் உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக சோவியத்விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது !!!!!!!!!!!!!?????
அதன் பின்பு இந்த பழமை வாய்ந்த மர்ம பிரமீடுகள் எப்படிக் கட்டப்பட்டது !!!!!!!!? ?????
அதன் பின் அதற்குள் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் .


அதிசயத்தின் அதிசயங்கள் தொடரும்

எழுதியவர் : (19-Feb-14, 11:35 am)
Tanglish : athisayam
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே