சாபம்-13

மனோகர் தலைமை மருத்துவரை அணுகி தாங்கள் இனி இங்கு வர நாளாகும் என்றும் அதுவரை அருணை நன்கு கவனிக்கும்படியும் சொல்லிவிட்டு தன் அலைபேசி என்னை கொடுத்தார்


மருத்துவரும் சரி என்று வாங்கிகொண்டார்,,,, மனோகர் அருணின் அறைக்கு சென்று அவன் அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்

வானம் வெளிச்ச ஆடையை கழற்றி இருளாடைய அணிய தயாரான அந்தி நேரம்,,,,

அப்போது மெல்லிய காற்று,,,,,,, அதில் மெல்லிசை கீதம் ஒன்று தவழ்ந்து வந்தது,,,,, மனோகர் மனம் மெல்ல அந்த கீதத்தின் பக்கம் ஈர்த்தது

அருண் அருகில் அமர்ந்திருந்தவர்,,,, மெல்ல அவர் கண்களின் ஒளி மங்க தொடங்கியது.,,,,,,,, ஒரு வித போதை நிலை,,,, சுற்றி எல்லாம் மங்கலாய்

தங்க நிற தாழம்பூக்கள் மத்தியில் அவள்,,,,, தங்க மங்கையோ???? முகம் இன்னும் தெளிவில்லை
அவரின் மனமும் தான்!!!!


கற்பனை உலகில் இருப்பதை தோன்றினாலும் மனோகருக்கு எல்லாம் நிஜமாக தோன்றுகிறது,,,
அவர் கனவு,,, அவர் கண்முன்,,, ஆம் அந்த ஸ்வர்ண காடு தான்

அவர் அங்கு அவளை பார்த்தார்,,,, சட்டேன்று எதோ கலவரம் மனதிலா??? கனவிலா??

ஏதேதோ முகங்கள்!!!! என்னனமோ வார்த்தைகள்!!!! வாள்சண்டை ஒலிகள்!!!! அதில் அவர் கழுத்தில் விழுந்தது ஒரு வாள்??? என்ன ஆனார்???? குழப்பம் குழப்பம்!!!! எங்கும் குழப்பம்


இத்தனை விநோதங்களும் கனவா??? மனதின் மறு சுழற்சியா????

எல்லாம் ஏற்கனவே நடந்தது போல இருந்தது??? அந்த குழப்பத்தோடு கண்விழித்தார்,,,,

அருண் படுத்திருந்தான்,,,, அவன் கைகளில் குளுகோஸ் ஓடிகொண்டிருந்தது,,,,,,,,

பெருமூச்சு விட்டார்,,,,,,,,,,


"ச்ச!! இந்த கனவு ஏன் என்ன இப்படி துரத்துது"- இந்த கனவு தான் இவரை பாடை படுத்தி அந்த ஸ்வர்ண காட்டிற்கு கூட்டி செல்கிறது

ஆனால் அதில் இருக்கும் விபரீதம் அவர் இன்னும் அறியவில்லை,,,,,,,,,,,,, அந்த விபரீதம் அறிந்தவர் ஒருவரே!!!!!!!!


யாரவர்???????????????????

எழுதியவர் : நிலா மகள் (19-Feb-14, 3:04 pm)
பார்வை : 412

மேலே