வித்தியாசம்
பச்சாதாபம்....
காதல்....
முன்பாதி நான் என்மீது வைத்தது
பின்பாதி நான் உன்னிடம் வைத்தது..
இரண்டிற்க்கும் எனக்கு
இடைவெளி தூரம் தான்..ஆதலால்
இன்னல்கள் பல...
உதறித்தள்ளும் என் அன்பு
உதிர்ந்து விடாமல் இருக்க
பொறுக்கிக் கொள்கிறேன்...
தேவையில்லை என்றபோதும்
தேவதை நீயென நம்பும்
பைத்தியம் நான்..
நான் கூடுடற்ற பறவை
நீ அழகிய கூட்டின் வெளிச்சம்