ஏழ்மை ஊனம் இல்லை

சீறிப் பாய்ந்து ஏற்றத்தாழ்வை
எதிர்த்திடல் வேண்டும்!
சினேகம் கொண்டு ஏழை வாழ்வை
ஏற்றிடல் வேண்டும்!

மனிதம் வாழ விடிவை நோக்கி
எழுந்திடல் வேண்டும்!
மடமை எண்ணம் மனதில் நீக்கி
வாழ்ந்திடல் வேண்டும்!

சுயநலம் தன்னை மனதிலிருந்து
நீக்கிடல் வேண்டும்!
சுயமாய் துணிந்து புதுமை ஏற்று
நின்றிடல் வேண்டும்!

சாதிக் கொடுமை எம்மில் இருந்து
ஒழித்திடல் வேண்டும்!
சாவை நினைந்து வருந்துவதிலிருந்து
ஒதுங்கிடல் வேண்டும்!

இரந்து கேட்டு வாழும் வாழ்வை
இகழ்ந்திடல் வேண்டும்!
இழிவாய்ப் பேசி ஏழை இகழ்வை
இழந்திடல் வேண்டும்!

குறைகள் சொல்லி குற்றம் காண்பதை
குறைத்திட வேண்டும்!
ஊனம் தன்னை மனதிலிருந்து
உயர்த்திடல் வேண்டும்!

உயர்வாம் ஒற்றுமை மனதில் என்றும்
காத்திடல் வேண்டும்!
உரிமைக் குரலை வீரியம் கொண்டு
காப்பிடல் வேண்டும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (25-Feb-14, 4:41 pm)
Tanglish : ezhamai oonam illai
பார்வை : 179

மேலே