உதிர்ந்து விழும் இலை

பொழுது விழும் நேரம்
மெல்ல வீசிய தென்றல்
தென்றலுக்கு ஆடிய கிளை
வாழ்வு முடிந்து உதிர்ந்தது இலையொன்று !

கிளை பிரிந்து
மண்ணைத் தொடுமுன்பு
ஞானம் பிறந்தது இலைக்கு !

வசந்த காலம் ஒன்றில்
பிறந்தேன் !

பச்சைநிற அழகி என்று
இறுமாப்பு கொண்டேன் !

பழுத்த இலை கண்டு
கைகொட்டி சிரித்தேன் !

சுடும் சூரியன் கண்டு
நாணமுற்று நின்றேன் !

நிலவொளியில் குளித்து
மகிழ்ந்தேன் !

புயல் மழைக்கும்
சுழல் காற்றுக்கும்
சவால் விட்டு நின்றேன் !

நாடி தளர்ந்து
உயிர் வற்றி
வருடவந்த தென்றலுக்கு
பிடிதளர்ந்து விழுந்தேன் !

மேலே கைகொட்டி சிரிக்கின்றன
இளம் இலைகள் !

மண்ணிலே பிறந்தவர்கள் எல்லாம்
மாய்ந்துவிட தானே போகின்றோம்!

இளமையும் முதுமையும்
பிறப்பும் இறப்பும்
எல்லோருக்கும் வருமே!

குறுகிய வாழ்வில்
மகிழ்ச்சியாய் இருப்போம் !

மண்ணிலே புதைந்து
மறுபடியும் பிறப்போம் !
நல்ல மரமாகவோ
இல்லை
நல்ல மனிதனாகவோ!
* * *
கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (25-Feb-14, 10:31 pm)
பார்வை : 127

மேலே