அத்தனையும் தவிடு பொடியாகி விடும்

ஏன் வாடி நிற்கிறாய் ...?
வாடுவதற்கு -நீ என்ன ..?
தாவரமா ,...? பூவா ..?
வரப்போவது தெரிவதில்லை
வாடி நிற்க தேவையில்லை
வாழ்ந்துதான் பார்ப்போம்
மலையே உருண்டு வந்தாலும்
நுனிவிரலால் நிறுத்துவோம் வா ...!!!

வசந்தம் வந்தாலும்
வேதனை வந்தாலும்
சுதந்திர பறவைபோல்
வாழ ....
அன்பாக பழகு
அளவோடு பழகு
பண்போடு பேசு
தன்னம்பிக்கை வளர்த்திடு
அத்தனையும் தவிடு
பொடியாகி விடும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (27-Feb-14, 4:26 pm)
பார்வை : 296

மேலே