நகைச்சுவை 079
திருமணமாகி சில தினங்களுக்குப் பின் கணவன் மனைவி இருவரும் கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது.
“இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன். அதைக் கேட்ட மனைவியின் முகம் மலர்ந்தது.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள்.
அன்றும் ஒரு முள் மனைவியின் காலைப் பதம் பார்த்து விட்டது.
“சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்றுமனைவி கேட்க,
“அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.