உழவு நாடன் 3

மொளப்பாரி பாட்டுக்
கேட்டு
மும்மாரி பொழிஞ்சிருந்த
வானம்...!! இப்ப
மொறப்பாடு வச்சிகிச்சி
புரியாத ராகங் கேட்டு...!!
******************************************
வசதியா வாழுங்கனு
வயலுக்கு நடுவால
செங்கப்பிச் சேத்துவச்சி
சொகமா நடந்து போக
சுடுகாட்டுக்கு ஒரு பாத....!!
எதிர்காலக் கணிப்புல
இன்னைக்கி அரசாங்கம்...!!!
*********************************************
சேத்துக்குள்ள சோறெடுத்தும்
சிப்பிக்குள்ள
முத்தெடுத்தும்...!!
பரம்பரை பெருமை சொல்ல
மிச்சமானதுங்க..!!
இடுப்புக்கயிறு கோவணமும்
அடுப்பங்கரை கருவாடும்....!!!
***********************************************
வெள்ளச்சேதம் பாக்கவந்த
வெள்ளத்தோலு அதிகாரிக...
வயலெறங்க மறுக்கையில
வெதும்பலும் வெசனமுமா..
கேட்டுக்குறேம் ஒரு கேள்வி....!!!
தட்டு நெறைய சோறு வச்சி
மோந்து பாத்தா
பசியாறுவீக...........?
************************************************

எழுதியவர் : சரவணா (3-Mar-14, 10:13 am)
பார்வை : 81

மேலே