மேன்மக்கள் மேன்மக்களே

பழகத் தெரிந்தால்
பகலவனும் குளிரும் - இப்
படத்தைப் பார்த்தால் அது
பார்வையில் புரியும்...!!

கையாள்தல் என்பது
கவி எழுதுதல் போல் - அதை
மெய்யால் உணர்ந்தோர்
மேதினியில் அறிஞர்...!!

பொய்யால் இன்பமுற்று அவர்
பொழுதினை கழியார் - தீமை
செய்யாது பிறரை
திறனுற வைப்பார்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Mar-14, 7:03 am)
பார்வை : 58

மேலே