மேன்மக்கள் மேன்மக்களே
பழகத் தெரிந்தால்
பகலவனும் குளிரும் - இப்
படத்தைப் பார்த்தால் அது
பார்வையில் புரியும்...!!
கையாள்தல் என்பது
கவி எழுதுதல் போல் - அதை
மெய்யால் உணர்ந்தோர்
மேதினியில் அறிஞர்...!!
பொய்யால் இன்பமுற்று அவர்
பொழுதினை கழியார் - தீமை
செய்யாது பிறரை
திறனுற வைப்பார்....!!