மழைத் துளி

கலைந்து கிடந்த
மேகம்
திரண்டு இருண்டு
வந்தது.
மழை பொழியக்
காத்திருந்தது
எங்கிருந்தோ வந்த
காற்று
அள்ளிச் சென்றது
மேகத்தினை !

ஒரு சொட்டு
மழைத்துளிக்காக
காத்திருக்கிறான்
உழவன்
கண்ணீர் துளியுடன் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-14, 10:30 pm)
Tanglish : malaith thuli
பார்வை : 913

மேலே