மனைவிக்குக் கல்யாணம் பெண்ணியம்

என்னால்
என் மனைவிக்கு
குழந்தை பாக்கியம் இல்லையென்று
மருத்துவம் கைவிட்டுவிட்டது.

என்ன செய்வேன்
என் மனைவிக்கு
வேறொரு திருமணம்
செய்து வைப்பதைத் தவிர!

அவள் வாரிசு
தரணியில் தவழட்டும்
அவளின்
பெண்மை
புனிதமாகட்டும்!!

‘மாங்கல்யம் தந்துநானே…’!!!
முடிந்ததும்
செய்திகள் பரபரத்தன…
இப்படியுமா செய்வான்
அவனுக்குப்
பைத்தியம் கீய்த்தியம்
பிடிச்சிப்போச்சா என்று
பெண்களும் பெண்ணியவாதிகளும்
பேசிக்கொண்டிருக்கும்
அதே வேளையில் -

ஆண்கள் சிலர்
நானும்
என் மனைவிக்குத்
திருமணம் செய்துவைப்பேன் என்று
சபதம் ஏற்றார்கள்.

புதுப் பால் புரட்சி துவங்கியது!

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (8-Mar-14, 10:20 am)
பார்வை : 75

மேலே