எல்லாம் ஒரு அனுபவந்தான்

(கல்யாண மண்டபத்தில் அளவாக சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவனிடம், அவனது அனுபவசாலி நண்பன்...)

அவன் : டேய்...என்னடா பண்றே?

இவன் : ம்ம்...சாப்பிட்டுகிட்டு இருக்கேன்...

அவன் : அது தெரியுது....என்ன இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுற...

இவன் : பின்ன எவ்வளவு சாப்பிட சொல்ற...?

அவன் : அடேய்...கல்யாண மண்டபத்தில சாப்பிடறதுக்கும் ஒரு முறை இருக்குடா... அதாவது.....முத ரவுண்டு சாப்பிடும்போது,இனி அடுத்த ரவுண்டுல சாப்பாடு கிடைக்காதுங்கிறா மாதிரியே சாப்பிடனும்....2வது ரவுண்டு சாப்பிடும்போது, முத ரவுண்டுல சாப்பாடே கிடைக்கலங்கிறது மாதிரி சாப்பிடனும்....புரியுதா.....ம்ஹூம்.... உன்னையெல்லாம் சாப்பிட கூப்பிட்டு வந்தேன்பாரு என்னய சொல்லணும்.....

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-14, 9:30 am)
பார்வை : 460

மேலே