கறைகள் அல்ல - அவை கவிதைகள்

அழகிய சுவற்றில் காப்பிக்கறை
அசிங்கமாய் காண்கையில் தெரிந்தது

அதையே கொஞ்சம் வித்தியாசமாய்
அன்று என் விழிகளும் கண்டது

வளர்ந்த மரத்தில் பறவைகளும்
வண்ணமாய் பறப்பதாய் தோன்றியது

பட்டென உடனே முடிவெடுத்தேன் என்
பார்வையில் இனிமை தத்தெடுக்க - இனி

கள்ளிச் செடியின் முட்கள் கண்டால் - நான்
கவிதை எழுத பென்சில் பறிப்பேன்........!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Mar-14, 7:17 am)
பார்வை : 64

மேலே