நீ எங்கே

விண்ணில் பறந்து வினயமாய் மறைந்த
வானத்து பறவையே ..! உன்னில் பயணித்த
மனிதரை என்ன செய்தாய் சொல் ...?

உறவுகள் இங்கு பதறித் தவிக்கிறது
மனிதத்தை தொலைத்த அறிவியல் பறவையே
நீ கடலில் விழுந்து கரைந்து போனாயோ ..?
காற்றில் கலந்து கரைந்து போனாயோ ...?
மலையில் மோதி சிதைந்து போனாயோ ..?
கொடும் பாதக தீவிரவாதிகளின்
சதி வலையில் சிக்கிக் கொண்டாயோ ...?

நினைவில் வாழ்ந்தவர்களை கனவாக்கினாயோ
கருத்து நிறைந்தவர்களை காணப்
பொணம் ஆக்கினாயோ...? கதறி அழுது
துடிக்குது இங்கு மனிதர் கூட்டம் ..!
விண்ணில் பறந்த முட்டாள் பறவையே ...!
உன்னில் பயணித்த மனிதர்களை - நீ
என்ன செய்தாய் சொல் ........?

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (16-Mar-14, 8:31 pm)
Tanglish : nee engae
பார்வை : 120

மேலே