இளைஞர்களே விழித்திடுங்கள் 0தாரகை0

பாரெங்கும் பாராத பாதகச் செயல்கள்
***பார்த்திடலாம் மானியமாய் பாரத நாட்டில்
தேர்தல்நாள் வரும்போதில் தொண்டர்கள் பிடிக்க
***தெருத்தெருவாய் மக்கள்முன் கூட்டம் போட்டு
மார்த்தட்டி எம்மாச்சி மக்களுக் கென்று
***மனமயக்கும் வாக்குகளை பொய்யாய்க் கொட்டி
சாறொழுகும் கனிக்கொத்த சக்கரைப் பேச்சில்
***சாய்த்திடுவார் படுகுழியில் சனங்களை யெல்லாம்

விழியிருந்தும் குருடர்களாய் வீணர்கள் பின்னே
***வழிநடந்து வாக்களித்து வாழ்வைத் தொலைத்து
முழிபிதுங்கி மூடர்களாய் முடங்கிக் கிடக்க
***மூழ்கடிக்கும் ஆழ்கடலே இவ்வரசிய லாகும்
பலிகடாவாய் நமையாக்கி,பாரை ஆளும்
***பண்பற்ற துரோகிகளைப் பந்தாடி வெல்ல
அழியாத அறிவுச்சுடர் அகத்தில் ஏற்றி
***அறியாமை தகர்த்தெறிந்து விழித்துக் கொள்வோம்

பொதுமக்கள்! இளைஞர்கள்! உங்கள் கையில்
***பொறுப்புள்ள பணியொன்று இருப்பதை உணர்ந்து
எதுவெல்லும் சத்தியமே! என்பதை உரைக்க
***எழுஞாயிராய் ஆட்சிக்கு இளசே வாரீர்!
புதுச்சட்டம் அரசியலில் புகுத்திட வாரீர்!
***பொய்யுரைக்கும் பேடிகளை பொசிக்கிட வாரீர்!
இதுவொன்றே தீர்வாக இந்நிலம் பெற்று
***இன்பமாய் வாழ்ந்திட நல்வாய்ப்பினைத் தாரீர்!

எழுதியவர் : தாரகை (22-Mar-14, 11:08 am)
பார்வை : 311

மேலே