விதியின் விளையாட்டு10
தன் தந்தையிடம் சென்ற ரிஷானி கையிலிருந்த பேப்பரை எடுத்து நீட்டினாள்.
என்னமா இது என்றார்?
உங்கள் ப்ரண்ட் மனோகர் பையன் மனோஜ் தந்து விட்டான் உங்ககிட்ட தர சொல்லி என்று தந்தையிடம் நீட்டி விட்டு நகர முயன்றாள்......
என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய் என்று அப்பா மெல்ல தலையை வருடினார்...!
இல்லப்பா ஒன்றுமில்லை சிறிது தலைவலி அதான் என்று முதல் பொய்யை கூறினாள்.
சரி ரெஸ்ட் எடு அப்புறம் பேசலாம் என்று அப்பா சொல்ல அம்மாவோ ஒடி வந்து என்ன ஆச்சி என்றாள் இந்தா இந்த டீயை குடி என்று கொடுத்து விட்டு திங்கள் லீவு போட்டிரும்மா என்று சொன்னார்...!
எதுக்கும்மா லீவு என்று ரிஷானி கேட்டாள் உன்கிட்ட ஷிவானி எதுவும் சொல்லலியா?
இல்லை அம்மா டல்லாக பதில் சொல்லிவிட்டு சென்றாள்....
சரி நீ போ ஷிவானி வந்ததும் சேர்ந்து பேச்சிக்கலாம் என்று சொல்லி அவளை அனுப்பினர்.
மனோஜ் வீட்டில் ஒரே கலவரம் அவன் அப்பாவிடம் கோவப்பட்டு பேசிக்கொண்டிருந்தான்....
என்னப்பா எனக்கு பிடிக்காததெல்லாம் செய்றீங்க கல்யாணம் என்பது மட்டும் என்விருப்பப்படி தயவு செய்து என் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தான்,,,,,,,,
அவனின் பேச்சை யாரும் கண்டுகொள்ளவில்லை.
நான் சொல்றததான் நீ கேட்கணும் என்று தீர்க்கமாக கூறினார் அவனது அப்பா மனோகர்......
சரி இனி உங்கள் விருப்பம் என்று சொல்லி கொண்டு அவன் கோவமாக அறைக்குள் சென்றான்.......!
விதி தொடரும்......