கவிஞன் யாரென்று

ஒரு படைப்பு சொல்லும்
கவிஞன் எப்படிப் பட்டவனென்று...
காதலில் தோய்ந்தவனா?
காமத்தில் கிளர்ந்தவனா?
இயற்கையில் இணைந்தவனா?
தேசத்தில் பிணைந்தவனா?
வீரத்தில் விளைந்தவனா?
சோகத்தில் புதைந்தவனா?
நட்பில் திளைத்தவனா?
பகையில் சூழ்ந்தவனா?
கவிஞனின் கண்ணாடி
கண்டிப்பாய் அவன் படைப்பே....
ஆககூடி அனைத்திலும்
இயங்கினாலும்
கருத்து மிகும் இடம்
காட்டி கொடுத்து விடும்
அவன் எப்பைப் பட்டவன் என்று?

எழுதியவர் : சித்ரா ராஜ் (29-Mar-14, 7:56 am)
Tanglish : kavingan yaarendru
பார்வை : 158

மேலே