கடல் கடந்துச் செல்கிறேன்

கடல் கடந்துச் செல்கிறேன் –கண்னே

உன் சீலை வாசம் பிரிந்து போகிறேன் !

தினம் தினம் கண் விழிக்கையில் கண் முன்

நின்று குளிர வைப்பாயே-பெண்ணே

கடல் கடந்துச் செல்கிறேன்-கலையிழந்து

போகுதடி என் கண்கள்-தினமும்

உன்னை காணாமல் - கவிச்சுடரே

கண் மூடி திறப்பதர்க்குள் காலம் கடந்து

போக ஆசைப்படுகிறேன்-கண்மணியே

உன் கடைக்கண் பார்வையில் தினம் தினம்

நான் விழுந்தெழவே

-ஹாசினி

எழுதியவர் : ஹாசினி (30-Mar-14, 11:46 am)
சேர்த்தது : இந்து மதி
பார்வை : 72

மேலே