நானில்லை அவள்

நானில்லை அவள்

நான் எழுதிய கவிதையில் பிழைகளே இல்லை
எழுதியது அவள் பெயர் மட்டும்
மையிலே மெய் கலந்து எழுதினேன்
ஏட்டிலே எறும்புகள்
எதிர்பார்த்ததுதான் அவள் தேன் பெயருக்கு

நான் வடித்த சிற்பத்தில் சிதறல்களே இல்லை
வடித்து அவள் இடை மட்டும்
உளியிலே உயிர் இட்டு வடித்தேன்
இடையிலே மெல்லிய மடிப்புகள்
எதிர்பார்த்ததுதான் அவள் வல்லிய இடைக்கு

நான் இசைத்த இசையில் சப்தங்களே இல்லை
இசைத்தது அவள் இமை சிமிட்டல்கள் மட்டும்
வீணையில் உயிர் நாதம் ஏற்றி இசைத்தேன்
இமையிலே இன்பத்தென்றல்
எதிர்பார்த்ததுதான் அவள் குளிர் விழியில்

எழுதியவர் : செந்தில் kumar (23-Feb-11, 4:36 pm)
பார்வை : 379

மேலே