பொய் தான்
எதிர்ப்பாராமல்
மோதிக்கொண்ட
நான்கு கண்கள்.
இரு உள்ளங்களில்
பரஸ்பரமாய்
ஓர் சலனம்.
அதுவா, இதுவா
என்ற தவிப்பில்
எத்தனையோ நிமிடங்கள்.
இரு கரங்கள்
உரசலில்
நீண்டு போகும்
பொடிநடை தூரங்கள்
நேற்று பேசிய
அதே வார்த்தைகள்
இன்றும் பேசி
தீரிந்துப்போகும்
கைபேசி அழைப்புகள்.
இருவேறு மனைகளில் வாசம்
ஒற்றை ஏக்கத்தில்
அந்த நிலவோடு
கழியும்
இரவுகள்..
எத்தனை சமயங்கள்
எத்தனை விஷயங்கள்
பொதுவாக உருபெற்றும்
ஏதும் அறியா நடிபினில்
தொலைந்த தருணங்கள்.
இப்படி
அத்தனையும் ஒத்துமையாய்
பக்கத்தில் அமர்ந்திருக்க,
நீ
ஒரு சில
அங்குல இடைவெளியில்
உன் நண்பனோடு உரையாட
இனம்புரியா
சூடினுள்
கருகி உருமாருது
என் மனம் .
இன்னும்
இதருக்கு
நட்பு என்ற
சாயம் பூச
விரும்பவில்லை
அய்யுனும்
இன்றும்
பொய் தான்
நானும், என் உள்ளமும்
உன் முன்...
என்னை கிள்ளிய
அந்த காற்று
உன்னை
கிள்ளும் வரை....