உன் அன்பு போதும் எனக்கு

இந்த உலகம் வெறுக்கையிலே
உன் காதல் இனித்ததடா...!
சொந்த உறவும் மறக்கயிலே
உன் ஆறுதல் போதுமடா...!

உன் பிரிவுகண்டு
உள்மனது அழுதபோதல்லாம்
உன் நினைவின்
சலனமதை ஆற்றியதே...!

கண் உறங்கும் நேரமதில்..
என்கனவாய் நீவரவே..
தூக்கம் வெறுத்தும்
கண்மூட காத்திருப்பேன்..!

என் மனது பகைத்தாலும்
விட்டு விலகா உள்ளுணர்வு நீ...!
உண்மைகொண்ட உன் உணர்வால்
நீ எந்தன் முதல் குழந்தை என்பேனே..!

சாதி,மத சகதியிலே
மனிதனை காசுபணம் ஆள
நாம் என்றும் உயிர் மதிக்கா
வாழ்வு அதை வாழவேணாம்..!

பணம்காசு பாராமல்
பட்டுடுத்தி மகிழாமல்
பஞ்சுகட்டில் நம்மை சுமக்காமல்..
அன்புநிறைந்து வாழவேணும் ஆயுள்வரை..!

காட்டுவாசியெனமாறி
மானம் அதை உயிரென உணர்ந்து
உணவு பார்க்க சேர்ந்துளைத்து..!
வரும் வலியாவும் பகிர்ந்து வாழ்வோம்..!

அன்பால் இணைபிரியாது
மனதில் என்றும் சேர்ந்திருக்க..
இறைவன் நம்மை காத்திருக்க
எமன் கூட வரமறுப்பான் உயிர்பறிக்க..!

உனக்காக என்னுயிரை அடகுவைப்பேன்..
ஈடாக என்னவேண்டுமென
இறைவன் அன்று கேட்கையிலே..
என் விருப்பம் இதுவென்று வேண்டிடுவேன்...!!

எனது அன்பால் ஓர் உயிரை விட்டுபோகிறேன்..
விரும்பி அவன் தேடயிலே..
வலிக்காமல் எனைசேர
நல்ல வரம் வேண்டுமென்பேன்..!

இறப்பில் ஒரு வாழ்விருந்தால்
அங்கும் உனக்காக காத்திருப்பேன்...
உன் அன்பில் நான் மகிழ்ந்திருக்க..
என் உயிரில் நீ கலந்திருக்க..!!!!!

....கவிபாரதி....

எழுதியவர் : (15-Apr-14, 9:36 pm)
பார்வை : 597

மேலே