மனம் கொத்தும் புகைப்படம்

பகலைத் திறப்பது
இரவின்
கடைசி விரல்...

விழி
அசைத்தலில்
பூமி இரண்டு....

மரம்
கொத்தும் பறவை
மனம் கொத்துவது
புகைப் படம்....

சுடு காட்டில்
தீ
வேடிக்கை பார்த்தான்
இறந்தவன்....

இரவை உதறிய
ஈரக் கூந்தல்காரி
பகலின் மிச்சத்தை
துளிகளாக்கினாள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (25-Apr-14, 8:24 pm)
பார்வை : 133

மேலே