சிநேகிதன் என் துவிச்சக்கர வண்டியே

என் பாலிய சிநேகிதா
இன்னும் நான் மறக்கவில்லை
நாம் இருவர் இணைந்து சென்ற
பயணங்களை ......

புகை கக்கும் எத்தனையோ
வாகனங்கள் இன்று என் வீட்டில்
மிகவும் வேகமாக என் பயணங்கள்
சென்று கொண்டேஇருக்கின்றன
ஆனால்
ஏனோ முழுமை பெறாதவைகளாக ...

என் தூக்கம் நுழையும் கனவுகளாய்
உன் மீதான என் பயணங்கள்
மெதுவாய் என்னை கடந்து சென்ற
வீதியோர மரங்கள்
எத்தனை முறை பயணித்தாலும்
செலவற்ற சொற்பணங்கள்
ஏனோ அலை நீளங்கள் கூடியதாக
இன்னும் என் நினைவில் .....

நவீனம்
இன்று எத்தனை குழந்தைகளை ஈன்றாளும்
மரபு ஈன்ற உன் கால் தொட்டு
நான் சென்ற அடிகள்
என் வரலாற்று சுவடாய் தெரிகிறது
நான் வந்த பாதையில்

இன்று என் கையில் தவழும் பணம்
என்னதான் ஆடினாலும்
உன்னை போன்ற ஒரு நண்பனை
மீண்டும் எனக்கு தருமா ....

என் மரணம்
என் அடி வரும் வரை
உன் ஞாபகம் என் மனதில்
இனிக்கும் நினைவாக ......

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (5-May-14, 1:34 pm)
பார்வை : 355

மேலே